சுவாமி விவேகானந்தர் கதைகள் – சந்நியாசி கீதம் உருவான கதை!

4.3/5 - (10 votes)

அமெரிக்காவில் தன் ரம்மியமான சிறகுகளை பிரித்துப் பாய்ந்து செல்லும் செயிண்ட் லாரன்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது ஆயிரம் தீவுப் பூங்கா. அங்கு சுவாமி விவேகானந்தர் மிஸ் எலிசபெத் டச்சர் என்பவரின் குடிலில் 1895 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 19 ஆம் நாள்( புதன் கிழமை) முதல் ஆகஸ்டு 6ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை தங்கி யிருந்தார். மிஸ் டச்சர் அடங்கிய மாணவக் குழுவிற்கு தினசரி ஆன்மிக வகுப்புகள் எடுத்து வந்தார் சுவாமிஜி. அங்கிருந்த மாணவியரில் சகோதரி கிறிஸ்டைன் இந்த சம்பவத்தினை நினைவு கூர்ந்து எழுதுகிறார்.

அன்றைய தினம் 12 பேர் அந்த வகுப்பில் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு பேரொளி வானத்திலிருந்து மெல்ல இறங்கி சுவாமிஜியின் திருப்பாதங்களைத் தீண்டியது போல் இருந்தது. அன்று மதியம் சுவாமிஜி துறவின் பெருமையைப் பற்றியும் காவி அணிவதால் வரும் ஆனந்தம், மற்றும் சுதந்திரம் பற்றியும் விவரித்துக் கொண்டே இருந்தார். திடீரென்று அங்கிருந்து சென்று விட்டார் அவர் பின் சிறிது நேரத்திற்குள் தியாகத்தையும் துறவையும் போற்றும் சந்நியாசி கீதம் என்ற கவிதையை எழுதி முடித்தார். அறுபது ஆண்டுகளுக்காகப் பிறகு 1995 ஆம் வருடம் செப்டம்பர் மாத வாக்கில்தான் சுவாமிஜி கைப்பட எழுதிய சந்நியாசி கீதத்தின் பேப்பர்கள் திரும்பக்கிடைத்தன. இது ஒரு விந்தையான விஷயம் 1948 ஆம் ஆண்டு நியூயார்க் ராமகிருஷ்ண விவேகானந்த மையம் ஆயிரம் தீவுப் பகுதியில் சுவாமிஜி தங்கியிருந்த வீட்டில் மறுசீரமைப்புப் பணிக்கு ஏற்பாடு செய்தது.

சுவாமிஜி எழுதிய சந்நியாசி கீதம் அங்கிருப்பது யாருக்கும் தெரியாததால் அது மற்ற பயனற்ற பொருள்களோடு வெளியே தன் குடும்பத்துடன் வழக்கமாக மடத்திற்குச் சென்று வரும் எலக்ட்ரீஷியனான மிஸ்டர் ஹரால்டு கோல் என்பவர் அந்த சந்நியாசி கீதத்தின் பெருமையை உணர்ந்து அந்தக் கவிதையை எடுத்து வந்து பத்திரமாக வைத்திருந்தார். சுவாமிஜியின் ஞாபகார்த்தமாக அவர் அதை வைத்திருந்தாலும் தன்னிடம் சுவாமிஜியின் கவிதை இருக்கும் தகவலை அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1955 செப்படம்பர் மாதம் அவர் அதை நியூயார்க்கில் உள்ள ராமகிருஷ்ண விவேகானந்த மையத்தின் தலைவரான சுவாமி நிகிலானந்த மகராஜிடம் ஒப்படைத்தார்.

சுவாமி சத்பிரகாஷானந்தர் எழுதிய என்ற நூலில் இந்த செய்தி வெளி வந்துள்ளது. சுவாமிஜியின் திருக்கரங்களினால் எழுதப்பட்ட சந்நியாச கீதத்தைப் பற்றி அவரது சீடர் சிறப்பித்துக் கூறுவதைக் காண்போம். சுவாமி விவேகானந்தரின் சீடர் சுவாமி ஆத்மானந்தர் தன் குருவான சுவாமிஜியிடம் அவர் கொண்டிருந்த பக்தி அளவிடற்கரியது. சுவாமிஜி எழுதிய கவிதைகளை பாடல்களை அவர் பாடும் போது அந்த இடம் முழுமையும் ஆன்மிக அதிர்வுகளால் நிரம்பும் அவரைப் பெரிதும் கவர்ந்தது சுவாமிஜி எழுதிய சந்நியாசி கீதம் என்ற பாடல்கள்.

புதிதாகத் துறவறம்மேற்கொண்டவர்களிடம் ஆத்மானந்தர் நீங்கள் உண்மையிலேயே துறவியாக வாழ விரும்பினால் இன்று முதல் இந்தப் பாடல்களின் ஒவ்வொரு வார்த்தையையும் இன்று முதல் தியானம் செய்யுங்கள் என்று கூறுவார். சுவாமிஜி கூறிய கருத்துக்கள் சந்நியாசிகளுக்கு மட்டும்தானா? வாழ்வை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் மனிதர்கள் அனைவருக்குமே அவை வழிகாட்டு அல்லவா! அவற்றின் ஒரு சிறிய பகுதியை நாமும் காண்போமே!

உறுதி உடைய நற்றுறவீ உம்மைப் பிணைத்துக் கீழ்ப்படுத்தி
இறுக்கும் தளைகளை நீர் நொறுக்கி எறிந்து விடுங்கள் இக்கணமே
மின்னும் தங்கத்தளையெனினும் மிகவும் கரிய இரும்பெனினும்
மன்றும் அன்பே ஆயிடினும் மனத்தில் வளரும் வெறுப்பெனினும்
எல்லாம் இடுக்கிப் பிடிபோல என்றும் உம்மை நெருக்குபவை
தங்கத் தளைகள் ஆனாலும் சற்றும் வலிமை குறைந்தனவா?
சிங்கத் துறவீ தளைமுற்றும் சிதைத் தெறியுங்கள் இப்போதே
ஓம்தத்ஸத் என நீங்கள் உள்ளம் உருகச் சொல்லுங்கள்.

என்ன அற்புதமான பொருள் பொதிந்த கவிதைகளை சுவாமிஜி வழங்கியிருக்கிறார்.

உண்மையான துறவியாக வாழ விரும்பும் சந்நியாசியாக இருந்தாலும் சரி இறைவனை அடைய விரும்பும் சாதகனாக இருந்தாலும் சரி நம்மைப் பிணைத்துள்ள தளைகளிலிருந்து விடுபட்டே ஆக வேண்டுமல்லவா!

தினமும் சுவாமிஜியின் இக் கவிதைகளின் பொருளைத் தியானிக்கும் போது, தளைகளிலிருந்து விடுபடவேண்டுமென்ற ஆர்வத்தையும், அதற்குரிய ஆற்றலையும் சுவாமிஜி வழங்குவார்.

Leave a comment