சூஃபி ஞானி கதைகள் – ஈசா நபியும் சில சந்தேகிகளும்

3/5 - (4 votes)

04

 

புனித மரியாளின் மகனான ஈசா, விஷயங்களைஅறியத் துடிக்கும் ஆர்வக் குறுகுறுப்பை கட்டுக்குள் அடக்காத சில நபர்களுடன் ஜெருசலேம் அருகிலிருந்த பாலைவனப் பகுதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்,

அம் மனிதர்கள், இறந்தோரை உயிர்ப்பிக்கும் அந்த ரககிய பெயரை தங்களுக்குச் சொல்லித் தருமாறு ஈசாவை நச்சரித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம், ” நான் அதை உங்களுக்குச் சொன்னால், நீங்கள் அதை துஷ்பிரயோகம் பண்ணுவீர்கள் , என்று ஈசா சொன்னார்.

இல்லை, அது குறித்த அறிவைப் பெறுவதற்கான தகுதியுடன், நாங்கள் தயாராக இருக்கிறோம். மேலும் அதைத் தெரிந்து கொள்வது எங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தவே செய்யும்’ என்றனர் அந்நபர்கள் .

நீங்கள் எதைக் கேட்கிறீர்கள் என்பது உங்க்ளுக்கு தெரியவில்லை’ என்று சொல்லி விட்டு, ஈசா நபி அதை அவர்களுக்குத் தெரிவித்து விட்டார்.

அதன் பிறகு அந் நபர்கள் பாலைவனத்தில் தொடர்ந்து சென்றார்கள். சற்று தூரத்தில் வெள்ளையாக எலும்புக் குவியல்கள் கிடந்ததை அவர்கள் கண்டனர்.

நாம் கற்றுக் கொண்ட வார்த்தையை இப்போது பரீட்சித்துப் பார்ப்போம் என்று அவர்கள் பேசிக் கொண்டனர்.அதன் படி செய்யவும் செய்தனர்.

அந்த எலும்புக் குவியல்கள் ரத்தமும் சதையும் பெற்று, கோரமான,. வெறிபிடித்த மிருகமாகி, அந் நபர்களைக் கடித்து குதறி நார் நாராகக் கிழித்து விட்டது.

இதை அறிவுள்ள விவேகிகள் புரிந்து கொள்ளுவார்கள். குறைந்த அறிவுள்ளவர்கள் இக் கதையைப் படிப்பதன் வழி தன்னை நிறைப் படுத்திக் கொள்வார்கள்.

Leave a comment