சூஃபி ஞானி கதைகள் – அரு மருந்து

3.4/5 - (5 votes)

shoofi
ஒர் சூஃபி மரணப் படுக்கையில் இருக்கும் போது, தனது மாணவரொருவரைக் கூப்பிட்டு. அவரிடம் கத்தையாக சில காகிதங்களை கொடுத்து விட்டுச் சொன்னார்:

“இதை வைத்துக் கொள்ளுங்கள். சில காகிதங்கள் எழுதப் பட்டுள்ளன. சில காகிதங்களில் எதுவும் எழுதப்படவில்லை. எழுதப்படாத பக்கங்கள், எழுதப்பட்டவை போலவே மதிப்பு மிக்கவை தான்’

சீடரும் காகிதங்களை எடுத்துக் கொண்டார். எழுதப்பட்டவைகளைக் கவனமாக படித்துக் கொண்டார். மற்ற காகிதங்களின் மதிப்பு பின்னாளில் உறுதிப்படும் வரை அவற்றை கவனமாகப் பாதுகாத்துக் கொண்டார்.

ஒரு நாள் சத்திரத்தில் அந்த சீடர் நோய்வாய்ப்பட்டு படுத்திருந்தார். குளிர் காய்ச்சலால் நடுங்கிக் கொண்டிருந்தார். அவர் மரணப் புள்ளியை நெருங்கிக் கொண்டிருக்கிறார் எனப் பட்டதால் அவரைப் பரிசோதிக்க மருத்துவர் வரவழைக்கப்பட்டார்.

“காத்துக் கொண்டிருப்பதற்கு நமக்கு நேரமில்லை . தரமான தாள்களை எனக்கு கொண்டு வந்து தாருங்கள். அதில் அவர் சிகிச்சைக்கான மந்திரத்தை நான் எழுதவேண்டும் ” என்று மருத்துவர் சொன்னார்.

அங்கு கூடியிருந்தவர்கள் சுற்றுமுற்றும் தேடினார்கள். சீடரின் பையைத் துழாவிய போது, சூஃபி ஞானி, சீடருக்குக் கொடுத்த காகிதங்களில் சில எழுதப்படாதவைகளாக இருப்பதைக் கண்டு அக் காகிதங்களை மருத்துவரிடம் கொடுத்தனர்.

மருத்தவர் தன்னிடம் கொடுக்கப்பட்ட காகிதத்தைக் கிழித்தார். அதன் மீது வினோதமான ஒரு படத்தை வரைந்தார்,

” இக் காகிதத்தைத் தண்ணீரில் முக்குங்கள். காகித்தலிருக்கும் மை நீரில் கரைந்ததும், அந்நீரை நோயாளிக்குக் குடிக்கக் கொடுங்கள்” என்று மருத்துவர் சொன்னார்.

மருத்துவர் சொன்ன மாதிரியே கூடியிருந்தோர் செய்தனர்.

சீடரும் உடனே சரியானார்.

உண்மையில் சீடர் குணமடைந்ததற்கான கரணம், எழுதப் படாத காகிதங்களில் சூஃபி ஞானி நோய்க்கான மருந்தைத் தடவி பூசியிருந்தார். இது ஒருவருக்கும் தெரியாது .

சீடர் குணமாகி, மரியாதைக்குரிய சூஃபி ஞானி இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். தன்னுடைய அனுபவங்களை அவரிடம் சொன்னார். எழுதாத பக்கத்தின் அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வமாயிருந்தார் சீடர்.

” காகிதத்திலிருந்த “உண்மையால் தான்’ நீ குணமானாய் மருத்துவர் வரைந்த வினோத உருவத்தால அல்ல’ என்றார் சீடரிடம் சூஃபி .

“நீங்கள் ஓரு உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் போது காப்பாற்றுவதுதான் முக்கியம். அது பற்றிய பேச்சு பின்னால் தான்’ என்று பேச்சை முடித்துக் கொண்டார் சூஃபி.

சீடர் அதைக் கேட்டு பின் வாங்கினார். தனக்கு சிகிச்சையளித்த மருத்துவரை தேடத் தொடங்கினார். எங்கெல்லாமோ சுற்றியலைந்து மருத்துவரைக் கண்டு பிடித்தார் சீடர்.

“எந்த நிலைமை , காகிதத்தில் வேறு மந்திரங்களை ஆய்ந்து எழுதித் தரச் செய்தது ? ‘ என்று மருந்துவரிடம் கேட்டார் சீடர்.

அதற்கு , ” தனது அற்புதங்களை இரகசியமாக மூடி மறைத்துக் கொள்ளும் அந்த சூஃபியிடம் நான் மாணவனாக இருந்த போது ,

“ஒரு நாள் சத்திரத்தில் நோய்வாய்பட்டிருக்கும் மனிதனைக் காண நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அவருக்கு இன்னின்ன வகையில் நோய்க் குறிகள் இருந்தால். வெற்றுக் காதிதத்தை எடுத்து வரச் செய்து அதில் ஒரு வரைபடம் வரை. பின் அந்த வரைபடத்தின் மை கலக்கப்பட்ட தண்ணீரை நோயாளியைக் குடிக்கச் செய்தால் , காய்ச்சல் மூன்று மணி நேரத்தில் போய்விடும் ‘ என்று தன்னிடம் சூஃபி சொன்னதாகச் சொன்னார் மருத்துவர்.

“அந்தக் காகிதங்கள் இல்லாவிட்டால், மாற்றாக என்ன செய்ய வேண்டும் என்ற விஷயங்கள் உங்களுக்கு சொல்லப்பட்டனவா? என்று மருத்துவரிடம் மேலும் கேட்டார் சீடர்.

காகிதங்கள் கண்டிப்பாக அங்கு இருக்க வேண்டும். காகிதங்கள் அங்கில்லா விட்டால், அது தனது கடமையினை அஜாக்கிரதையாக ஒதுக்கிய மனிதனின் செயலாகும். துறவிகளின் ஆணைகளை கண்டு கொள்ளாததற்கு அந்த செயல் ஓப்பாகும். அப்படிப்பட்ட மனிதன் தனக்குத்தானே மரணத்தை வருவித்துக் கொள்ளுவான். அந்தத் தருணத்தில் காகிதம் அங்கில்லாவிட்டால். நோயாளி இறந்து விடுவான்” என்று சூஃபி சொன்னதாகச் சொன்னார் மருத்துவர்.

Leave a comment