ஒரு ராஜ விசுவாசியின் கதை

5/5 - (2 votes)

காலம் கிபி.1300, சரியாக சொல்ல வேண்டும் என்றால் மூன்றாம் இராஜேந்திர சோழனுக்கு பிந்தைய காலம்.

வாசுகாறை என்னும் நாட்டை சுமவன் என்னும் அரசன் அறம் தவறாது ஆட்சி செய்து வந்தான்.சுமவன் மிக பெரும் சிவபக்தன், அதனால் நாட்டின் தென்பகுதியில் மிகப்பெரும் சிவாலயத்தை அமைக்கும் பணியில் ஈடு பட்டிருந்தான்.

நாட்டில் காலம் தவறாது மழை பொழிந்ததால் விவசாயமும் அதை சார்ந்த தொழில்களும் சிறப்பாக நடந்து வந்தன. நாட்டின் ஒரு பக்கம் கடல் நீர் பரப்பி இருந்ததால், வாசுகாறைக்கு இரண்டு நன்மைகள். ஒன்று வாணிபம் செலித்தது மற்றொன்று அந்த பகுதி வழியாக எதிரிகளின் அச்சுறுத்தல்கள் குறைவு.

நாட்டின் மக்கள் சுயதிருப்தியுடன் செலிப்பாக வாழ்ந்து வந்தனர் அதானல் நாட்டின் கஜானாவும் நிரம்பி இருந்தது. ஆலய பணிகளுக்காக செல்வத்தை கணக்கிடாமல் சுமவன் செலவழித்து கொண்டிருந்தான்.

வாசுகாறை-க்கு அவ்வப்போது எதிரிகளிடம் இருந்து அச்சுருத்தல்கள் இருந்து கொண்டே இருந்தது இதற்கு நாட்டின் இயற்கை வளம் முக்கிய காரணம். நாட்டின் நடுவே கோடு கிழித்தார் போல் வாவலாறு எனும் ஆறு ஓடி நாட்டை செலிப்பாக்கியது. இத்தகைய செலிப்பிற்கு சுமவனின் ஆட்சி கொள்கைகளும் முக்கிய காரணம்.

வெறும் ஏட்டு கல்வி மட்டும் உதவாது என்று எண்ணிய மன்னன், தொழில் சார்ந்த கல்வி முறையை பெரிதும் ஊக்குவித்தான் அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

இது போக முக்கிய கொளகையாக, வாணிபத்தில் ஈடு படும் தன் நாட்டை சேர்ந்தவர்க்கு போதுமான சலுகைகளையும் அளித்து வந்தான். வெளி நாடு வணிகர்களை அவன் பெரிதும் ஊக்குவித்ததில்லை. இதனாலேயே வாசுகாறை செல்வ செலிப்பு மிக்க நாடாக மாறியது.
இது போக பகைவர் நாட்டம் கொள்ள மற்றொரு காரணமும் இருந்தது அது, நாட்டின் இளவரசி பவதனி. பவதனி ஓர் பேரழகி,மன்னனுக்கு வேறு ஆண் வாரிசு கிடையாது அதானால் பவதனியை மணந்து கொண்டால் நாட்டையும் கைப்பற்றி விடலாம் என்கிற எண்ணத்தில் பகைவர்கள் இருந்தனர்.

சுமவன் ஆன்மிக பணிகளில் ஈடு பட்டிருந்ததால் நாட்டை பாதுகாக்கும் பொறுப்பினை தனது சேனாதிபதி வம்திரனிடம் ஒப்படைத்திருந்தான்.

வீரத்திற்கும் , தீரத்திற்கும் அடையாளம் வம்திரன். தவறு செய்தவர்கள் மன்னனுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ இவனுக்கு பயப்படுவார்கள் அவ்வளவு கண்டிப்பானவன்.
மன்னன் தவிர்த்து எவருக்கும் அடிபணிய மாட்டான், சரியென பட்டதை இடம் , பொருள் , ஏவல் பாராது சொல்லிவிடுவான். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தட்டி கேட்க்க தயங்கமாட்டான். இதெல்லாம் அவன் சிறு வயது முதல் கற்ற பாடம். இதானால் நிறைய எதிரிகளையும் சம்பாதித்திருந்தான். இவனது முதுகில் குத்த சமயம் பார்த்து காத்திருக்கிறார்கள் இதில் சில அமைச்சர்களும் அடக்கம்.

போர்தொழில் போக இவனுக்கு பல திறமைகள் உண்டு, அதில் பாடுவதும், இசைப்பதும் அவனுக்கு பிடித்தவை. வீணை எடுத்து மீட்ட ஆரம்பித்தால் இராவணனே தோற்று விடுவான் என்கிற அளவுக்கு எங்கும் ஒலிக்கும் இசை.

தனது நாடான வாசுகாறையை இரவு , பகல், குளிர், வெயில் பாராது, ஒரு நொடியும் தவறாது பாதுகாத்து வந்தான். நட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தனக்கு மிகவும் விசுவாசமானவர்களை ஒற்றர்களாக நியமித்திருந்தான்.

இதனால் ஏதேனும் பிரச்சனை தொடங்கும் முன்பே அதை வேறுடன் அழிக்க முடிந்தது.
எதிரிகளின் அச்சுறுத்தல்கள் அதிகம் இருப்பதால், பவதினி நகர்வலம் செல்லும் பட்சத்தில் பாதுகாப்பு மிகவும் சிரத்தையாக மேற்கொள்ளப்பட்டிருக்கும். வம்திரன் நிச்சயம் அங்கே இருப்பான் பவதனியின் மெய்காப்பாளனாக.

இவ்வாறு நட்கள் நகர்ந்து கொண்டிருந்தது, எதிரிகளின் சின்ன சின்ன சீண்டல்களை வம்திரன் வெற்றிகரமாக முறியடித்து வந்தான்.

***

சும்பனுக்கு சில நாட்களாக சரியான் தூக்கமில்லை, மேலும் துர்சொப்பனங்கள் வேறு, இதற்கான காரணம் அறிய அரசகுல ஜோதிடர் அறகசியை வரவழைத்தான்.

கிரக நிலைகளை ஆராய்ந்த அவர் மவுனித்தார். மன்னனின் பதட்டம் அறிந்த வம்திரன் அறகசியின் மவுனம் கலைத்தான்.

அவரிடம், அறகசி அவர்களை , தாங்கள் கண்ட கிரக நிலைகளை பற்றி விழக்கி சொல்லுங்கள் என்றான்.

அவ்ர் பெருமூச்சை விட்டு விட்டு சொல்ல துவங்கினார்,

“மன்னா, தங்களின் கிரக நிலை சரியாக இல்லை, இதனால் நாட்டிற்கு பெரும் ஆபத்து வரவிருக்கிறது.”

இதை சரி செய்ய எதும் வழிகள் இருக்கிறதா, சற்றே பதட்டபட்டார் மன்னர்

இருக்கிறது மன்னா, நமது அண்டை நாடான வார்சுழியில் அமைந்துள்ள சிவாலயத்தில் தாங்கள் தொடர்ந்து பதினாறு நாட்கள் பூஜை செய்ய வேண்டும் என்றார்.

இப்போது வம்திரன் குறுக்கிட்டான், அவர்கள் எப்போது நம்முடன் போர் புரியலாம் என்று காத்திருக்கிறார்கள் அவர்களிடம் சென்று நாம் எப்படி உதவி கோர முடியும்.

மாற்று வழி ஒன்று இருக்கிறது மன்னா, அதை செல்லுங்கள் என்று அவசர படுத்தினான் வம்திரன்.

அது வேண்டாம் மன்னா.

பரவாயில்லை செல்லுங்கள் இங்கே நாம் மூவர் மட்டும் தானே இருக்கிறோம். சொல்லுங்கள் அறகசி.

நமது இளவரசிக்கு , மணமுடிதது அவளை மணப்பவனை வாசுகாறைக்கு மன்னனாக முடிசூட்ட வேண்டும்.

இவ்வளவு தானா இதை சொல்லவா தயங்கி நின்றீர்கள்.

இது மட்டும் இல்லை மன்னா, முடி சூட்டிய பின்னர் “நீங்கள், உங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் மன்னா” என்று திக்கி தினறி சொல்லி முடித்தார்.

அவர் வாக்கியத்தை முடித்த நொடி, வெகுண்டெழுந்த வம்திரன், தனது வாளை எடுத்து அறகசியின் கழுத்தில் வைத்தான்.

உத்தரவிடுங்கள் மன்னா… இப்போதே கொல்கிறேன் என்றான் கடும் சினத்துடன்.

அவனை அமைதியடைய சொல்லிவிட்டு தானும் மொளனம் ஆனார் மன்னர், இருவரிடமும் நான் சற்று தனிமையில் இருக்க விரும்புகிறேன். இங்கு நடந்தது நம்க்குள் இருக்கட்டும். நாளை நான் உங்களை சந்தித்து இது பற்றி பேசுகிறேன் நீங்கள் இப்போது நீங்கள் போகலாம் என்றார்.

வம்திரன் சற்று தயங்கினாலும் , சமவனின் வார்த்தைக்ககட்டு பட்டு அங்கிருந்து சென்றான். அவன் சென்றால் அவன் நினைவு முழுவதும் அறகசி சொன்ன விசயத்திலேயே நின்றது.

***

ம்திரன் நாட்டிற்கே சேனாதிவதியாக இருந்தாலும் அவனுக்கு மென்மையான மறுபக்கமும் இருந்தது. அவனுக்குள்ளும் ஒரு காதல் இருந்தது, காதலுக்கு காரணம் மத்தமிழ் பேருக்கேற்றார் போல் தமிழின் இனிமையும் அழகும் சரிவர கலந்த பெண்ணாக இருந்தால்.

இவளுடன் ஒப்பிட்டால் பவதனியும் தோற்று போவாள். இருவருக்குள்ளும் சரியான புரிதல் இருந்தது, இருவரும் பார்த்துக்கொள்வதே அறிது.

இன்று அவளை அவன் பார்க்க சென்றான், மாலை மங்கும் வேளையில், விழித்திருந்தது போதும் என்று சூரியன் வீட்டிற்கு செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்தது.

அவளுக்கு முன்பாகவே நந்தவனத்திர்க்கு சென்று அவளுக்காக காத்திருந்தான். அவளும் வந்தாள். மின்னல் ஒளியில் மட்டுமே மலரும் தாழம்பூ சூடி காற்றில் எங்கும் நறுமணம் கமழ, அடிமேல் அடிவைத்து இவனை நோக்கி வந்தாள்.

அப்போது நிலவிய சூழ் நிலையில் தொலைவில் இருந்து அவளை பார்த்தால் அவள் பூலோகத்தை சேர்ந்தவள் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டர்.

அவனும் ஒரு நொடி நிலைகுலைந்துதான் போனான், பின்பு அவளிடம் அரசவையில் நடந்த சிலவற்றை கூறினான். முன்னதாக மன்னனிடம் தனது காதல் பற்றி சொல்லி இவளை மனம் முடிக்க அனுமதி கேட்க்க போவதாக சொல்லியிருந்தான் அவள் அதை வினவினாள்.
இவன் இல்லை என்பது போல் தலையாட்டிவிட்டு, நமக்கும் வார்சுழிக்கு போர் மூளும் நிலை இருக்கிறது அந்த போரில் வெற்றி கண்டு மன்னனிடம் இது பற்றி பேசுகிறேன் என்றான்.

ஏன் திடீரெண போர் என மீண்டும் வினவினாள்??

அவன் பதில் கூறாது நேரம் ஆகிவிட்டது நீ உனது இல்லத்திற்கு செல், மீண்டும் உன்னை மற்றொரு நாள் சந்திக்கின்றேன் என்று வழியனுப்பினான்.

அவளை அனுப்பிவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.

***

றுநாள், சுமவனை காண இருவரும் சென்றனர். அப்போது தான் எடுத்த முடிவை அவர்களிடம் சொல்ல துவங்கினார்.

கூடிய விரைவில் பவதனிக்கு மணம் முடித்துவிட்டு , தவம் புரிய வனம் புக போவதாக சொல்லி நான் வனாந்திரத்தில் எனது உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்திருக்கிறேன் என்றார்.

இப்போது குறுக்கிட்ட வம்திரன், நாட்டு மக்களுக்கு கேடு நேராமல் இருக்க தங்கள் உயிரை விடவும் துணிந்து விட்டீர்கள். வேண்டாம் மன்னா நான் இருக்கிறேன், வார்சுழியை போரில் வென்று காணிக்கை ஆக்குகிறேன். பின்பு நீங்கள் அங்கு சென்று பூஜை செய்யலாம்.
வேண்டாம் வம்திரா, அவர்களது படை பலம் , நம்மை காட்டிலும் அதிகம், அவர்களை வெல்வது கடினம்.

எண்ணிக்கை இருந்தால் என்ன? என்னிடம் வெற்றிபெற வேண்டும் என்கிற வேட்கை இருக்கிறது. எனது உயிர் போகும் முன்னர் அவர்களை வெல்வேன்,தங்களது ஆசிர்வாதத்துடன்.

வாழ்த்தி அனுப்புங்கள் மன்னா…

***

ன்னரும் வாழ்த்தி அனுப்பினார், அன்றே தனது சகாக்களுடன், தாக்குதல் திட்டத்தை வகுக்க துவங்கினான்.

வார்சுழி ஒரு பக்கம் மலை, அதன் பக்கவாட்டு பக்கத்தில் கடல் அதனால் இரு திசை தாக்குதலில் ஈடுபட்டால் போதுமானது என்றான் ஒருவன்.

பொதுவான இடத்தில் போர் நடைபெற இரு நாட்டு மன்னர்களின் ஒப்புதல் அவசியம். சுமவன் சம்மதித்து விட்டார், வார்சுழி இதற்கு உடன்படாத பட்ச்சத்தில் , இரு திசை தாக்குதல் நடத்துவோம் என்று முடிவு செய்தான்.

சங்ககால தமிழ் மரபுபடி எதிரி நாட்டிற்கு முரசறைந்து, போர் புரிய வருவதை தெரிவித்தான் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

அடுத்த கட்ட நடவடிக்கையாக, வம்திரன் மற்றும் பதினைந்து பேர் கொண்ட குழு வெட்சிப்பூ அணிந்து ஆநிரை கவர்தலில் ஈடு பட்டனர். இதற்கு அவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைத்தது.

அவர்கள், ஆநிரையை மீட்க்க கரந்தை பூ அணிந்து வந்தனர், வந்தவர்களை, தனது படை பலத்தால் தோற்கடித்து அனுப்பினான்.

பின்னர் , வார்சிழியின் தூதுவன் வந்தான், தங்கள் மன்னர் போர் புரிய நாட்டம் தெரிவித்திருப்பதையும், இடத்தை நீங்களே தேர்வு செய்யலாம் என்றான்.

வந்தவனிடம், பொதுவான சமவெளி பகுதியை தேர்வு செய்து அனுப்பிவைத்தான் வம்திரன்.

***

று நாள் விடிந்தது, சங்குகள் முழங்க போர்கலம் சென்றான் வம்திரன் தனது படை வீரர்களுடன்.

எதிரிகளின் படை இவர்களைவிட பெரிதாகவே இருந்தது. அவர்கள் சக்கரவியூகத்தில் படைகளை அணிவகுத்து களம் புகுந்தனர். அதை முறியடிக்க ஊசிமுனை வியூகத்தை வம்திரன் பயன்படுத்தின்.

இங்கே வியூகம் என்பது படை வீரர்கள், அணிவகுத்து போர்புரியும் தோற்றத்தை குறிக்கும்.
ஆரம்பத்தில் புழுதி பறந்த போர்களம், நேரம் ஆக ஆக இரத்த சகதியில் புழுதி அமுங்கியது. மதிய பழுது வரை நடைபெற்ற போரில் வார்சுழியின் பக்கமே இழப்பு அதிகமாக இருந்தது.
மதிய பொழுதுவரை நிலையாக போர் செய்த வம்திரனால், அதன் பிறகு நிலையாக போர் புரிய இயலவில்லை.

இதற்கு காரணம் , மெதுவாக கொல்லும் நஞ்சை எதிரி நாட்டு அரசன் இவனுக்கு குடுக்க சொல்லியிருக்கிறான் என்பதை தாமதமாகத் தான் அறிந்தார்கள் ஒற்றர்கள்.

விவரம் அறிந்ததும் உடனடியாக வைத்தியர் வரவழைக்கப்பட்டார். மாற்று மருந்து அளிக்கப்பட்டு மீண்டெழுந்தான் வம்திரன்.

இந்த நிலைமையில் அவனை போர் புரிய வேண்டாம் என்று தடுத்தனர் அவனது சகாக்கள், “வீழ்வது இழிவாக விழுந்து கிடப்பது இழிவே” என்று சொல்லி அவர்களிடம் ஒரு புன்னகையை உதி்ர்த்தான்.

நஞ்சிட்ட துரோகியை பிடிக்க தன் சகாக்களிடம் உததரவிட்டு, ஆவேசமாக போர்களம் புகுந்தான்.

அம்புகளை மழையென பொழிந்து முன்னேறினான், இந்த முயற்ச்சியில் வார்சுழி சேனாதிபதியை சொர்கத்திற்கு அனுப்பினான். பின்பு வார்சுழி மன்னனை நோக்கி தனது கவனத்தை திருப்பினான். அவனை ஆக்ரோஷமாக நெருங்கினான்.

இவனது வேகம் கண்டு சரணடைய முற்ச்சிப்பது போல் அவனிடம் மண்டியிட்டு வேண்டலானான். வம்திரன் யோசித்து நின்ற நேரத்தில் தன்னிடம் இருந்த நஞ்சில் தோய்ந்த கத்தியால் வம்திரனது வலது மார்பில் குத்தினான்.

இதை எதிர்பாரதபோதும் சுதாரித்து பின் தனது வாளைக்கொண்டு ஒரே வீச்சில் அவனது தலையய் கொய்தான்.

ஏற்கனவே உணவில் இருந்த நஞ்சுடன் இப்போது கத்தில் இருந்ததும் சேர்ந்து கொண்டதால் அவனால் நிலைகொள்ள முடியவில்லை.

இருந்தும் உயிர் போகும் முன் வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன் என்று வாக்கு குடுத்திருந்ததால் தனது புரவில் தாவி ஏறி வாசுகாறை நோக்கி விரையத் துவங்கினான்.

***

ரத்தம் வழியும் தேகத்துடன் அரசவைக்குள் நுழைந்தான், மன்னை கண்டு தான் வெற்றி கண்டதை சொன்னான். பின்பு தனது காதல் பற்றியும் கஷ்டப்பட்டு சொல்லி முடித்து மயங்கி விழுந்து விட்டான்.

உடனே அரண்மனை வைத்தியர் வரவழைக்கப்பட்டார், வம்திரனுக்கு வைத்தியம் பார்க்கப்பட்டது. அவன் கண்விழிக்க இரண்டு நாட்கள் ஆகும் என்றார் வைத்தியர்.
மன்னன் போரில் வெற்றி பெற்றாலும் வருத்தத்துடனே காணப்பட்டார். இதை கண்ட ஒரு அரசவை அமைச்சர் தனிமையில் காரணம் வினவினார்.

எல்லாம் , இளவரசியை பற்றியது தான் அவளை வம்திரனுக்கு மனம் முடித்து வைத்து விட்டால். நாடும் நன்றாக இருக்கும் , அவளும் சந்தோஷமாக இருப்பாள் என்று எண்ணியிருந்தேன். ஆனால், வம்திரனோ இன்னொருத்தியை காதலிப்பதாக சொல்கிறான்.
இதில் என்ன முடிவெடுக்க என்று எனக்கு தெரியவில்லை.

இதற்கு நான் வழி சொல்கிறேன். இந்த அமைச்சருக்கும் வம்திரனுக்கும் பனி போர் நடந்து கொண்டிருக்கிறது. என்பதை அறியாத மன்னன். அமைச்சரின் ஆலோசனைக்கு செவிசாய்த்தான்.

வம்திரனின் சந்தோஷத்தை கெடுக்க நினைத்த அமைச்சர், சுமவனிடம் அவன் காதல் கொள்ளும் பெண்ணை நாடு கடத்திவிடலாம் அல்லது அவளை கொலை செய்து விடலாம்.
ஒரு நாட்டின் வருங்காலத்திற்காக , ஒரு உயிரை கொல்வதில் எந்த பாவமும் இல்லை என்றார்.

முதலில் மறுத்த மன்னன் பின்னர் சமதித்தார். அதுவும் வம்திரன் கண்விழிப்பதர்க்குள் நிகழவேண்டும்.

இந்த முடிவின் படி மறு நாளே மத்தமிழ் வீட்டுடன் நெருப்பி்ன் நக்குகளுக்கு இரையாக்கப்பட்டாள்.அது கொலையாக இல்லாமல் விபத்தென ஆக்கப்பட்டது.

***

குணமடைந்த வம்திரன் கண்விழித்தான், தடு மாற்றத்துடன் நடந்து மன்னனை பார்க்க சென்றான்.

இவனிடம் மத்தமிழிக்கு ஏற்ப்பட்டதை எப்படி சொல்வது என்று குழப்பத்தில் இருந்தான். இவனது குழப்பத்தை உணர்ந்த வம்திரன் அவனே கேட்டான்.

என்ன மன்னா? இன்னும் என்ன வருத்தம்? என்றான்

தயங்கி தயங்கி துயரசெய்தியை சொன்னான்.

கேட்டவுடன் நொருங்கி போன் வம்திரன், தான் உடனடியா துறவரத்தில் ஈடுபடபோவதாக தனது போர் வாளை சுமவனின் பாதத்தில் வைத்தான்.

இதை சற்றும் எதிர் பாராத மன்னன் அவனது தோழ் தொட்டு “வம்திரா.. நட்டின் பாதுகாப்பே உனது கையில் தான் இருக்கிறது. இதை நிரந்தரமாக்கவும் நாட்டின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டும் நான் பவதனியை உனக்கு மணம் முடடித்து வைக்க முடிவு செய்திரு்க்கிறேன். இந்த நேரத்தில் நீ வனம் புக போவதாக செல்கிறாய். இத்தனை நாள் நீ கட்டி காத்த வாசுகாறையை இனி யார் பார்த்து கொள்வார்”

என்னை தடுக்காதீர்கள் மன்னா..

அப்படி சொல்லாதே வம்திரா உனக்காக இல்லாவிட்டாலும் எனக்காகவும் இந்த நாட்டிற்காகவும் நீ இதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

உடனே நீ மாற வேண்டாம் , நான் தெற்கே கட்டி வரும் ஆலயத்தின் திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது அது முடிந்து. ஆலயத்தில் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு உங்களது திருமணத்தை நடத்தலாம் என்றார்.

வம்திரனுக்கு இஷ்டம் இல்ல விட்டாலும், மன்னரின் வார்த்தையை தட்ட முடியாத காரணத்தால் சம்மதித்தான்.

***

நாட்கள், கடந்தன ஆலய திருப்பணிகள் முடிந்தன, ஆகம விதிகளின் படி பூஜைகள் மேற்கொள்ள, மிக பெரும் யாகங்களுக்கு ஏற்ப்பாடு செய்ய பட்டது.

இதற்கிடையில் மத்தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதி வம்திரனின் செவிகளுக்கு வந்து சேர்ந்தது. கடும் கோபம் கொண்டான்.

என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான், மன்னரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தான். மறு கணம் வேண்டாம் துறவு மேற்கொள்ளுவோம் என்று முடிவு செய்தான். இப்படி ஏகப்பட்ட சிந்தனைகள் அவனது மூளைக்குள் சுற்றி திரிந்தன.

இறுதியாக ஒரு முடிவெடுத்தான் , மன்னனுக்கு மடல் ஒன்றை எழுதினான், அவனுக்கு விசுவாசமான ஒருவனை அழைத்து மன்னரிம் சேர்க்க சொன்னான்.

பின்பு ஆலயம் நோக்கி சென்றான் , அங்கே எறிந்து கொண்டிருக்கும் யாக குண்டத்தில் விழுந்து இவனும் நெருப்புக்கு இரையானான்.

அந்த மடலில்,

மன்னா,
மத்தமிழுக்கு ஏற்ப்பட்ட உன்மை நிலையை நான் அறிவேன். அதானல், என்னுள் ஏகப்பட்ட குழப்பமான எண்ணங்கள் தோன்றின. இறுதியாக ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். என்னவளை தீண்டிய நெருப்பின் நாவில் நானும் விழ ஆசைப்படுகிறேன். இதற்கு மற்றுமொரு காரணம் இருக்கிறது. பஞ்ச பூதங்களில் நெருப்பிர்க்கு மட்டுமே நேரடியாக வானுலுகத்தில் சேர்க்கும் சக்தி உள்ளது. வையத்தில் சேராத எங்கள் காதல் வானத்திலாவது சேரவேண்டும் என்று இறைவனை பிரார்த்தியுங்கள்.

முக்கியமாக, எனக்கு தெரிந்த அனைத்து ராஜ ரகசியுங்களும் என்னுடனே இருக்கிறது. நீங்கள் என்னை வஞ்சித்ததால் நானும் அப்படி செய்வேன் என்று நீங்கள் நினைத்து பயம் கொள்ள வேண்டாம்.

நீங்கள் இதை படிக்கும் நேரத்தில் நான் வையத்தை விட்டு சென்றிருப்பேன்.

இது ஒரு ராஜ விசுவாசியின் இறுதி மடல்.

படித்த மன்னர் தன்னையும் அறியாது கண்ணீர் வடித்து அழத்துவங்கினார்.

Leave a comment