சிறுவர் கதைகள் – நரித் தந்திரம்

3.6/5 - (9 votes)

ஒரு காடு. அங்கே ஒரு சிங்கம். அந்தச் சிங்கம் ஒரு கூட்டம் போட்டுது. எல்லா மிருகமும் வந்தாச்சு.

முதல்லே ஒரு குரங்கைக் கூப்பிட்டுது.

‘’இப்படிக் கிட்டே வா…என் உடம்பை முகர்ந்து பார்…எப்படி இருக்கு?’’ன்னு கேட்டுது.

குரங்கு வந்து முகர்ந்து பார்த்துட்டு …’’வாசனை நல்லா இல்லீங்க… கொஞ்சம் மோசமாத்தான் இருக்கு!’’ன்னுது.

சிங்கத்துக்கு கோபம் வந்துட்டது. ‘’என் உடம்பைப் பத்தியா அப்படிச் சொல்றே’’ன்னு ஓங்கி ஒரு அறை விட்டுது. குரங்கு சுருட்டிக்கிட்டு விழுந்துட்டது.

அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டது…. ‘’நீ வா…வந்து பார்த்துட்டு சொல்லு’’ ன்னது. கரடி….அந்தக் குரங்கைப் பார்த்துக்கிட்டே வந்தது.

சிங்கத்தை முகர்ந்து பார்த்த்து…’’ஆகா …ரோஜாப்பூ வாசனை!’’ ன்னு பொய்யா சொல்றே?ன்னு ஓங்கி ஒரு அறை. அதுவும் சுருட்டிக்கிட்டு விழுந்தது.

அடுத்த படியா ஒரு நரியைக் கூப்பிட்டது. ‘’நீ வந்து சொல்லு…நீதான் சரியாச் சொல்லுவே!’’ நரி…குரங்கையும் கரடியையும் பார்த்துக்கிட்டே வந்துது. சிங்கத்தை முகர்ந்து பார்த்த்து. அப்புறம் சொல்லிச்சு; ‘’மன்னிக்கணும் தலைவா, எனக்கு மூணு நாளா ஜலதோஷம்!’’

 

இதுதான் நரித் தந்திரம்ங்கிறது.
இன்றைய மனிதர்களுக்கு இந்த தந்திரம் அதிகமாத் தேவைப்படுது.
…..அடிக்கடி தேவைப்படுது…

2 Comments

  1. vishnu
    We should learn from this story, how to speak to cunny persons during their untolerable behaviour.
    Reply March 10, 2016 at 4:14 pm
    • vishnu
      yes, I agree with you
      Reply March 10, 2016 at 4:16 pm

Leave a comment